என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Friday, January 7, 2011

நமக்குள்ளும் பறக்கிறதா வண்ணத்துப்பூச்சி



எந்தக் கொசுவின் வாசலைப் பற்றியும்
அறியத் தேவையில்லை
எந்தப் பூனையின் இருப்பிடம் பற்றியும்
தேடத் தேவையில்லை
எந்தக் கிளியின் துவம்சம் பற்றியும்
பேசத் தேவையில்லை
எந்த மனிதனின் உழைப்புப் பற்றியும்
துலாவத் தேவையில்லை.

நம்மை நாம்
சுயவிசாரணை செய்துகொள்வோம்
எந்த மண்புழு
நமக்குள் நீந்துகின்றது என்று
எந்தப் பூரான்
நமக்குள் குத்துகின்றது என்று
எந்தக் கறையான்
நம்மை அரிக்கிறது என்று.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா