குண்டுமணிகளோடு சேர்ந்து எரிகிறது
மண்
உன் கூந்தல் இழைகள் பொசுங்கி மணக்கின்றன.
நீயும் உன் காதலும்
எனக்குள் எரிவதைப்போல
உன் ஆன்மாவுக்கு யார்தான் கபனிட்டது.....
உனக்காகவே எனக்குள்
பொழுது வணங்கியை வளர்த்துக்கொண்டிருக்கின்றேன்.
உன் கவிதைக்குள்
நீ பற்றிய கால்களும்
நீ பற்றிய கைகளும்
மிகவும் சுவாரஷ்யமாக எழுதப்படுகின்றன
மண்
எனது பாதங்களையும் மணக்கச் செய்யும்.
No comments:
Post a Comment