என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, August 23, 2010

உனக்கான கவிதையின் கால்களும் கைகளும்

குண்டுமணிகளோடு சேர்ந்து எரிகிறது
மண்
உன் கூந்தல் இழைகள் பொசுங்கி மணக்கின்றன.
நீயும் உன் காதலும்
எனக்குள் எரிவதைப்போல
உன் ஆன்மாவுக்கு யார்தான் கபனிட்டது.....
உனக்காகவே எனக்குள்
பொழுது வணங்கியை வளர்த்துக்கொண்டிருக்கின்றேன்.
உன் கவிதைக்குள்
நீ பற்றிய கால்களும்
நீ பற்றிய கைகளும்
மிகவும் சுவாரஷ்யமாக எழுதப்படுகின்றன
மண்
எனது பாதங்களையும் மணக்கச் செய்யும்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா