என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, August 23, 2010

நான் சொறிந்து காயப்பட்ட நீயும் நானும்

வகுப்பறையில் உன்னை நான் சொறிந்துவிட்டேன்
நீ அழுது கொண்டிருந்தாய்
உன் விழி வழியே ஒரு கங்கையை ஓடவிட்டிருந்தாய்
உன் உடையில் படிந்திருந்த
அழுக்குப் பற்றிப் பேசினேன்
அவை வாழைக் கசறு
தலையில் தடவும் எண்ணைய்
எனவும் கண்டேன்
அதைப் பற்றிப்பேசினேன்
அறிவுரைத்தேன்
உன் நகத்தில் தேங்கிய ஊத்தை பற்றியும்
உன் பாடப் புத்தகங்களின் கிழிசல்களையும்
வினவியபோதே
எனக்குள் நான் பயங்கரமாகப் படிந்தேன்
நீ அழுது கொண்டிருந்தாய்
என்னிடம் நெருங்கிப்பேச தவறி நின்றாய்
வாப்பாவின் மறு திருமணமும்
உம்மாவின் தனிமையும்
உன் கண்ணீருக்குள் நீந்தியபோதே
நானும் உன்போல் காயப்பட்டுவிட்டேன்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா