என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, July 3, 2010

வலியிலும் இனித்தது

நீந்திக்கத் தெரியாமல்
நீரின் சிறு நெளிவைப் பற்றியவாறு
பாதை குலைகிறது.
வானத்தின் கந்துகளில் தொங்கித் தப்புவதற்கு
ஓர்மை எங்கிருந்து வரும்?
விருட்சங்கள்
மலைத் தொடர்கள் முளைக்காது போயின்
இந்தப் பூமி
தளம்பிக்கொண்டே இருக்கும்.
வானுயர்ந்த மாடிகளாலோ பிளக்கிறது
நிலத் தென்னம் பாளையை.

நேரிய வழி முறைக்குள்
வகையான முட்கள் குதியில் செலுத்தப்படும் போது
உலகம் பற்றிய மேன்மையான வலி
மெல்ல எழுந்து நோவப் பார்க்கும்
நிறைமாதக் கற்பிணி.

மனசை அழுகுபடுத்துவதற்கு
மலர்களும் அஞ்சினால்
மனங்கள் பாழ்வளவாகி நாறும்..
வெய்யில் தெருவிலும்;
முகம் மலர்ந்து வாடுகிறது.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா