என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, July 3, 2010

விலா எலும்பின் நீ

நீ எனது வளைந்த விலா எலும்பிலிருந்து
படைக்கப்பட்டிருக்கின்றாய்
அந்த உண்மையிலேயே
எனது மன வானமெல்லாம்
நீ வானவில்லாக வளைந்து கிடக்கின்றாய்
எனப் பூரிக்கின்றேன்.
வானவில்லின் வளைவுக்குள்
சூரியனைப் பார்.
மிக மகிழ்வாகத் தெரிகிறது.
மிக அழகாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா