காலையில் தூவானமாக வந்து
நனைத்த செய்தி
என்னை ஒரு பக்கமும் அசையவிடாமல்
மூளையை பிடித்துக்கொண்டு நின்றது.
மிகவும் பொறுப்புடன் கடக்க முயன்றபோது
ஒரு தும்பியின் மனசு துடித்துப் பேசியது.
இந்த இரவும்
வழமையாகக் குரைக்கின்ற நாய்
வேலியைப் பிய்த்துக்கொண்டிருப்பதாக.
வேகமாக ஓடி ஒடிக் குரைத்தது.
சுபஹூக்கு எழாத பல மனிதர்கள்
இனிமையாகத் தூ}ங்கும் தெருவில்
நானும் தூங்கிக்கொண்டிருக்கின்றேன்.
நடு இரவொன்றில்
எந்தப் பாம்பு தவளையைப் பிடித்தது
துப்பாக்கிச் சத்தத்துக்கு பழக்கப்பட்ட
இதயம் இது.
வெளியில் நின்று விழிக்கமுடியாது.
இன்னும் பல தும்பிகளின் மனசுகள்
துடிதுடித்து இறந்துகொண்டிருக்கின்றன.
நாயும் குரைத்துக்கொண்டிருக்கின்றது.
அவனும் அவளும் ஒவ்வொரு இரவும்
இனிமையைப் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment