நான் இப்பொழுது இரத்தம் உறைந்த
தேசத்தில் இருக்கிறேன்.
மனிதர்களின் இறுகிய பிடியிலிருந்து
நோய்வாய்ப்பட்டபடியே.
வானத்தில் பறந்துகொண்டு
பூமியைப்பிடுங்கும் தந்திரோபாயத்துடன்
மனிதன் மிக வேகமாக நிமிர்ந்திருக்கின்றான்.
எனது கடமையை
என்னைத் தூக்கி புயத்தில் சுமந்த
பெரியோர்களின் அகிம்சையை
மண் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
எனது தொப்பிள் கொடி
அறுக்கப்பட்டதிலிருந்து.

No comments:
Post a Comment