என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, March 28, 2011

வெறும் நிழலாக இல்லாமல்



இப்போதைக்கு
நிலவு சுதந்திரமாக விழுகின்ற பூமியில்
எனக்குள்
சுதந்திரப்படுகின்றது கனவும்.

தீப்பிளம்பின் எச்சங்களோ
துப்பாக்கி ரவைகளின் பலிபீடங்களோ
கொலைக்காட்சியின் சித்திரங்களோ
கனவாவதில்லை.

ஆயினும் என்ன.
உண்மையை
நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றன
மனிதன் வாழும் இடங்களில்
சேமிக்கப்பட்டிருக்கும் நிகழ்வின் நிஜங்கள்.

ஒரு காலம்
இந்நிலத்தின் சுவடுகளில் நியாயம் முளைக்கும்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா