இன்று மிகவும் அமைதியாக ஊர்கிறது
நார் நார்களாக கிழிக்கப்படுகின்ற
இரவுத் தூக்கம்.
குண்டுப்புரளி, கலவரம் இல்லாத
எனது அயர்ந்த தூக்கத்தின்
இருப்பைச் சிதைப்பதற்கு
சில்லூரியாயினும் காத்துக்கிடக்கும்.
நான் உதைக்கப்படுகின்ற
ஒவ்வொரு இரவும்
பலமான சத்தத்துடன் உணாவுகிறேன்.
இதனால்
மீண்டும் மீண்டும் எனது தூக்கத்தில்
ஒரு அரணைக்கடக்க முயலவேண்டியிருக்கிறது.
ஆனாலும் ஒரு நகக் கீறலாக
நட்சத்திரங்களைச் சுமந்தபடி
நிலம் நோக்கியும் வீழ்கிறது.
இப்படி அவதியான சில நேரங்களில்
சதங்கையின் நெருக்கமான அணைப்பில்
மிக அமைதியாக ஊர்கிறது
எனது இனிமையான தூக்கம்
No comments:
Post a Comment