
இப்போதைக்கு
நிலவு சுதந்திரமாக விழுகின்ற பூமியில்
எனக்குள்
சுதந்திரப்படுகின்றது கனவும்.
தீப்பிளம்பின் எச்சங்களோ
துப்பாக்கி ரவைகளின் பலிபீடங்களோ
கொலைக்காட்சியின் சித்திரங்களோ
கனவாவதில்லை.
ஆயினும் என்ன.
உண்மையை
நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றன
மனிதன் வாழும் இடங்களில்
சேமிக்கப்பட்டிருக்கும் நிகழ்வின் நிஜங்கள்.
ஒரு காலம்
இந்நிலத்தின் சுவடுகளில் நியாயம் முளைக்கும்.
No comments:
Post a Comment