என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, April 10, 2010

ஒரு முடிவின் பின்னால்

பெரும் முட்களால் அமைந்த
வேலியைத் தகர்க்க இயலாமல்
நரையும் திரையும் தொடங்கிவிட்டன.

மெல்ல மெல்ல
காற்றின் பெயரில்
எலவம் பஞ்சாக அலைகிறது மனம்.
ஒரு முடிவுக்காக
எல்லாப் பாதைகளும் பழகிவிட்டன.
எல்லா தேர்வுகளும் நடந்துவிட்டன.

நான் மிகச் சுவையாக
அருந்திக்கொண்டிருக்கிறேன்.
பழஞ்சோற்றுக் கரையலை
அன்றும்
இன்றுமாக.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா