நான் இப்பொழுது இரத்த தேசத்தில் இல்லை.
மனிதர்களின் இறுகிய பிடியிலிருந்து
நோய்வாய்ப்பட்டபடியே கழன்றுவிட்டேன்.
வானத்தில் பறந்துகொண்டு
பூமியைப்பிடுங்கும் தந்திரோபாயத்துடன்
மனிதன் மிக வேகமாக நிமிர்ந்திருக்கின்றான்.
எனது கடமையை
என்னைத் தூக்கி புயத்தில் சுமக்க வைத்த
பெரியோர்களின் அகிம்சையை
மண் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
48 இல் எனது தொப்புள் கொடி
அறுக்கப்பட்டதிலிருந்து
இப்படிக்கு நான்
இரத்த தேசத்தில் இல்லை
good & nice i like it
ReplyDeletei wishing u for a good poems
ReplyDelete