
என்னுடைய தோட்டத்தில்
மரங்கள் வளர வேண்டாமென்றும்
பூக்கள் மலர வேண்டாமென்றும்
குயிலோசை கேட்க வேண்டாமென்றும்
கட்டளை இட்டாய்.
உன்னுடைய தோட்டத்தில்
மரங்கள் வளர்வது
பூக்கள் மலர்வது
குயிலோசை கேட்பது
எதற்காக?
என் தோட்டத்தில்
மரங்கள் வளராவிட்டாலும்
பூக்கள் மலராவிட்டாலும்
குயிலோசை கேட்காவிட்டாலும்
பசுந்தரைதான்.
நல்ல மழையும் கிடைக்கிறது
நல்ல காற்றும் வீசுகிறது.
No comments:
Post a Comment