என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, February 6, 2012

மேகம் சொல்வது

என்னை வேறொரு திசைக்கு இழுத்தச் செல்கிறது
காற்று.
பனியறியாது.
வெயிலறியாது
குணமறியாது
குலமறியாது
நான் இழுத்துச் செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றேன்.

நான்
மிகவும் அழகாக வட்டமிட்டுக்கொண்டிருந்தேன்
அல்லது கலைந்து உலாவிக்கொண்டிருந்தேன்
வானவில்லையும் வடிவமைத்துக்கொண்டே இருந்தேன்.
இந்தப் பூமியைப் பற்றி கவனமாக யோசித்துக்கொண்டும் இருந்தேன்.

என் இருளுக்குள்
மழைக் குஞ்சுகளைச்
சுமந்தபடியே திரிந்தேன்.

நாளை என் ஈரலிப்பில்
நகக் காளான்களும் முளைக்கும்
தகரைகளும் முளைக்கும்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா